கிரகப் பிரவேசம் பிரம்ம முகூர்த்தத்தில் செய்ய வேண்டியது எது? வீட்டிற்குள் நுழைவதா? அல்லது வீட்டைத் தயார் செய்வதா? இன்றைய காலத்தில் யாராவது புதிய வீடு கட்டினால், "காலை 4 மணிக்கே பால் காய்ச்ச வேண்டும்", "பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டிற்குள் நுழைய வேண்டும்" என்று பலரும் அறிவுரை கூறுவதை நாம் காண்கிறோம். இதைக் கேட்டால் சில சமயம் எனக்கு சிரிப்புதான் வருகிறது. மனிதன் புதிய வீட்டில் குடியேற வேண்டுமா? அல்லது இரவெல்லாம் தூங்காமல் கண் சிவந்து, கொட்டாவி விட்டுக்கொண்டே வீட்டிற்குள் நுழைய வேண்டுமா? சற்று சிந்தித்துப் பார்த்தால், சாஸ்திரத்தின் உண்மையான நோக்கம் வேறு என்பதை அறிய முடியும். பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன? பிரம்ம முகூர்த்தம் என்பது சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன் உள்ள காலப்பகுதி. இது தியானம், ஜபம், வேத பாராயணம், ஹோமம், யாகம் போன்ற ஆன்மிகச் செயல்களுக்கு மிக உயர்ந்த காலமாகக் கருதப்படுகிறது. அந்த நேரத்தில் உலகம் அமைதியாக இருக்கும். மனமும் தெளிவாக இருக்கும். ஆகவே தேவதைகளின் அருளைப் பெறும் கர்மங்கள் செய்ய உகந்த நேரம் அது. ஆனால் ஒரு கேள்வி எழுகிறது....
ஜோதிடம் மன ஆறுதலா? மாயையா? {அ} காலத்தின் கண்ணாடியா ? காலையில் உதிக்கும் சூரியனை ஒருவர் வணங்குகிறார். இன்னொருவர் வெப்பம் என்று வெறுக்கிறார். அதற்காக சூரியன் மாறிவிடுகிறானா? அதேபோலத்தான் ஜோதிடமும். ஒருவர் அதை நம்புகிறார். ஒருவர் அதை மறுக்கிறார். ஒருவர் அதில் வழிகாட்டலைக் காண்கிறார். மற்றொருவர் அதில் குற்றங்களையே காண்கிறார். ஆனால்... மனிதர்களின் அபிப்பிராயங்கள் மாறுவதால் உண்மை மாறுவதில்லை. இன்று ஜோதிடத்தைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. "அது ஒரு உளவியல் விளையாட்டு." "அது மனிதர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் ஒரு கருவி." "அது பயத்தை உண்டாக்குகிறது." "அது வெறும் மூடநம்பிக்கை." இவ்வாறான விமர்சனங்களும் பாராட்டுகளும் காலங்காலமாகக் கூறப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு விஷயத்தை நாம் சிந்திக்க வேண்டும். ஒரு கண்ணாடி உங்கள் முகத்தைப் பிரதிபலிக்கிறது. அந்த பிரதிபலிப்பு உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக கண்ணாடியை உடைத்தால் உங்கள் முகம் மாறிவிடுமா? ஜோதிடமும் அப்படித்தான். அது உருவாக்குவதில்லை. அது காட்டுகிறது. அது எழுதுவதில்லை. அது வாசிக்கிறது. அது ...