Skip to main content

Posts

ஆடி அமாவாசை – பித்ருக்களின் ஆசியும் தர்ம சாஸ்திர ரகசியங்களும்

  "மாதா பிதா குரு தெய்வம்" — இந்த நான்கு சொற்களுக்குள் சனாதன தர்மத்தின் முழு வாழ்வியல் தத்துவமும் அடங்கியுள்ளது. மனிதன் இறைவனை வணங்குவதற்கு முன், அவனுக்கு உயிர் தந்த தாய், தந்தையைத் தெய்வமாகக் காண வேண்டும் என்று இந்திய ஞான மரபு வலியுறுத்துகிறது. இதுவே "மாத்ரு தேவோ பவ,  பித்ரு தேவோ பவ" என்ற உபநிஷத் வாக்கியத்தின் உயிர்நாடியாகும். இந்தப் பிரபஞ்சத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தனியாக உருவாகவில்லை. அவனுக்குப் பின்னால் எண்ணற்ற தலைமுறைகளின் வாழ்வும், தியாகமும், அனுபவமும், ஆசீர்வாதமும் இருக்கின்றன. ஒரு மரம் அதன் கிளைகளால் உயர்ந்தாலும், அதன் உயிர் வேர்களில்தான் உள்ளது. அதுபோல, ஒரு குடும்பத்தின் வேர்கள் அதன் முன்னோர்கள். அந்த வேர்களை மறந்துவிட்டால், மரம் வறண்டு விடுவது போல, நன்றியுணர்வை இழந்த மனித சமுதாயமும் தனது பண்பாட்டு அடையாளத்தை இழக்கும். சனாதன தர்மம் மனிதன் பிறக்கும்போதே அவன் மூன்று மகத்தான கடன்களுடன் பிறக்கிறான் என்று கூறுகிறது. அவை: தேவ கடன் (Deva Ṛṇa) – இயற்கைக்கும், தெய்வீக சக்திகளுக்கும் நாம் செலுத்த வேண்டிய நன்றிக் கடன். ரிஷி கடன் (Rishi Ṛṇa) – வேதங்களைய...
Recent posts

தட்சிணாயன புண்ணிய காலமும் ஆடி மாதத்தின் தெய்வீகப் பெருமையும்

  இயற்கையின் சுழற்சியில் கதிரவனின் பயணம் வெறும் கால மாற்றம் மட்டுமல்ல; அது மனித ஆன்மாவின் பரிணாம வளர்ச்சிக்கான ஒரு குறியீடு. சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கும் ‘உத்தராயணம்’ புறவளர்ச்சியையும், லௌகீக வெற்றியையும் குறிக்கின்றது என்றால்,  சூரியன் தெற்கு நோக்கித் திரும்பும் ‘தட்சிணாயனம்’ அகவளர்ச்சியையும், ஆன்ம ஞானத்தையும், பித்ருக்களின் ஆசியையும் வாரி வழங்கும் காலமாகும். அந்தப் பெரும் கால மாற்றத்தின் நுழைவு வாயிலாகத் திகழ்வதுதான் ‘ஆடி’ என்னும் அற்புத மாதம். வேத ஜோதிடத்தின்படி, மனிதர்களின் ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். இதில் தை முதல் ஆனி வரையிலான ‘உத்தராயணம்’ தேவர்களின் பகல் பொழுதாகவும், ஆடி முதல் மார்கழி வரையிலான ‘தட்சிணாயனம்’ தேவர்களின் இரவுப் பொழுதாகவும் கொள்ளப்படுகிறது. இரவு என்பது உறக்கத்திற்கான காலம் மட்டுமல்ல; அது தியானத்திற்கும், யோகத்திற்கும், ஆத்ம சிந்தனைக்கும் உகந்த அமைதிக் காலம். கதிரவன் தன் தேரைத் தெற்கு நோக்கித் திருப்பும் இந்த ‘கர்க்கடக சங்கிராந்தி’ புண்ணிய காலத்தில், பிரபஞ்ச ஆற்றல் புற உலகிலிருந்து அக உலகிற்குத் திரும்புகிறது. எனவேதான், இக்காலத்தில் ஆ...

ஜோதிடம் – நம்பிக்கையை விற்கும் கலை அல்ல, உண்மையை உரைக்கும் ஞானம்

என்னிடம் ஜோதிடம் கேட்பவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் நடைபெறுவதில்லை. ஏனெனில் எல்லோருடைய விதியும் ஒன்றல்ல.  சிலருக்கு நல்ல காலம் வரும் என்று சொல்வேன்;  சிலருக்கு சோதனைகள் வரப்போகின்றன என்று எச்சரிப்பேன்.  நல்ல செய்தியை எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால் கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனம் மிகச் சிலருக்கே உண்டு. உண்மையைச் சொன்னவனை வெறுப்பது எளிது. உண்மையை உணர்வது தான் கடினம். இன்று நான் உணர்ந்த ஒரு உண்மை என்னவென்றால்,  என்னுடைய தோல்வியை எதிர்பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.  நான் சொல்லாததைச் சொன்னதாகக் கூறுபவர்களும் இருக்கிறார்கள். தேவையற்ற விமர்சனங்களை உருவாக்குபவர்களும் இருக்கிறார்கள்.  அதில் அந்நியர்கள் மட்டுமல்ல, என்னுடன் பயணித்த சிலரும் இருக்கலாம். என் வளர்ச்சியையும், என் மதிப்பையும் சகிக்க முடியாமல் பேசுபவர்களும் இருக்கலாம். ஆனால் அவர்கள் அறியாத ஒன்று உண்டு.  கல்லின் மீது எத்தனை முறை உளி விழுந்தாலும், அது உடைந்து போவதற்காக அல்ல; சிலையாக உயர்வதற்காக. அதேபோல்,  என் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு விமர்சனமும், ஒவ்வொரு தோல்வியும், ஒவ்வொரு ...

கிரகப் பிரவேசம்- பிரம்ம முகூர்த்தத்தில் கூடாது.

கிரகப் பிரவேசம் பிரம்ம முகூர்த்தத்தில் செய்ய வேண்டியது எது? வீட்டிற்குள் நுழைவதா? அல்லது வீட்டைத் தயார் செய்வதா? இன்றைய காலத்தில் யாராவது புதிய வீடு கட்டினால், "காலை 4 மணிக்கே பால் காய்ச்ச வேண்டும்", "பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டிற்குள் நுழைய வேண்டும்" என்று பலரும் அறிவுரை கூறுவதை நாம் காண்கிறோம். இதைக் கேட்டால் சில சமயம் எனக்கு சிரிப்புதான் வருகிறது. மனிதன் புதிய வீட்டில் குடியேற வேண்டுமா? அல்லது இரவெல்லாம் தூங்காமல் கண் சிவந்து, கொட்டாவி விட்டுக்கொண்டே வீட்டிற்குள் நுழைய வேண்டுமா?   சற்று சிந்தித்துப் பார்த்தால், சாஸ்திரத்தின் உண்மையான நோக்கம் வேறு என்பதை அறிய முடியும். பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன? பிரம்ம முகூர்த்தம் என்பது சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன் உள்ள காலப்பகுதி.   இது தியானம், ஜபம், வேத பாராயணம், ஹோமம், யாகம் போன்ற ஆன்மிகச் செயல்களுக்கு மிக உயர்ந்த காலமாகக் கருதப்படுகிறது.   அந்த நேரத்தில் உலகம் அமைதியாக இருக்கும். மனமும் தெளிவாக இருக்கும். ஆகவே தேவதைகளின் அருளைப் பெறும் கர்மங்கள் செய்ய உகந்த நேரம் அது. ஆனால் ஒரு கேள்வி எழுகிறது....

ஜோதிடம் – மன ஆறுதலா? மாயையா? {அ} காலத்தின் கண்ணாடியா?

  ஜோதிடம் மன ஆறுதலா? மாயையா?  {அ} காலத்தின் கண்ணாடியா ? காலையில் உதிக்கும் சூரியனை ஒருவர் வணங்குகிறார். இன்னொருவர் வெப்பம் என்று வெறுக்கிறார். அதற்காக சூரியன் மாறிவிடுகிறானா? அதேபோலத்தான் ஜோதிடமும். ஒருவர் அதை நம்புகிறார். ஒருவர் அதை மறுக்கிறார். ஒருவர் அதில் வழிகாட்டலைக் காண்கிறார். மற்றொருவர் அதில் குற்றங்களையே காண்கிறார். ஆனால்... மனிதர்களின் அபிப்பிராயங்கள் மாறுவதால் உண்மை மாறுவதில்லை. இன்று ஜோதிடத்தைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. "அது ஒரு உளவியல் விளையாட்டு." "அது மனிதர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் ஒரு கருவி." "அது பயத்தை உண்டாக்குகிறது." "அது வெறும் மூடநம்பிக்கை." இவ்வாறான விமர்சனங்களும் பாராட்டுகளும் காலங்காலமாகக் கூறப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு விஷயத்தை நாம் சிந்திக்க வேண்டும். ஒரு கண்ணாடி உங்கள் முகத்தைப் பிரதிபலிக்கிறது. அந்த பிரதிபலிப்பு உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக கண்ணாடியை உடைத்தால் உங்கள் முகம் மாறிவிடுமா? ஜோதிடமும் அப்படித்தான். அது உருவாக்குவதில்லை. அது காட்டுகிறது. அது எழுதுவதில்லை. அது வாசிக்கிறது. அது ...

ஜோதிடம் ஒரு “அறிவியல்” அல்ல, உயர்ந்த “கலை”

வேத மரபில் ஜோதிடம் வெறும் கணக்குப் புத்தகம் அல்ல. அது மனித வாழ்க்கையின் நுண்ணுணர்வை உணரும் ஒரு தெய்வீகக் கலை. வேதாங்கங்களில் ஜோதிடத்திற்கு அளிக்கப்பட்ட இடம் சாதாரணமல்ல. “வேதத்தின் கண்” என்று போற்றப்பட்டது. ஏன் “கண்”? கண் என்பது வெறும் அளவிடும் கருவி அல்ல; அது பார்க்கிறது, உணர்கிறது, வேறுபடுத்துகிறது, நுண்மையை அறிகிறது. அதேபோல் ஜோதிடமும் வெறும் கணிதக் கணக்கல்ல. அது காலத்தின் இயல்பை உணரும் கலை. இன்றைய உலகில் எதற்காவது மதிப்பு கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு “Scientific” என்ற முத்திரை தேவைப்படுகிறது. அறிவியல் என்றால் மட்டுமே உண்மை, மற்றவை அனைத்தும் மூடநம்பிக்கை என்ற மனநிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் ஜோதிடத்தையும் கட்டாயப்படுத்தி “அறிவியல்” என்று நிரூபிக்க முயல்கிறார்கள். ஆனால் இங்கு ஒரு அடிப்படை கேள்வி எழுகிறது: கலையை விட உயர்ந்தது அறிவியலா? ஒரு தாயின் அன்பை ஆய்வுகூடத்தில் அளவிட முடியுமா? ஒரு இசையின் தாக்கத்தை சூத்திரத்தில் அடைக்க முடியுமா? ஒரு கவிதையின் உயிரை கணிதமாக எழுத முடியுமா? அப்படியானால் மனித வாழ்வின் ஆழ்ந்த அனுபவங்களைப் பேசும் ஜோதிடத்தை எப்படி வெறும் “Science” என்ற குறுகிய ப...

கடக ராசி - தமிழ் புத்தாண்டு பராபவ வருட ராசிபலன்

கண்ணீர்க் கதைகள் முடிந்து, கரன்சி எண்ணும் வசந்த காலம்! ஜென்ம குருவும், பாக்கிய சனியும் இணைக்கும் பிரம்மாண்ட ராஜயோகம்! "பொறுத்தார் பூமி ஆள்வார்" என்பதற்கு இலக்கணமாகக் கடந்த சில வருடங்களாகவே எத்தனையோ அவமானங்கள், பொருளாதாரச் சரிவுகள், மன உளைச்சல்களைச் சந்தித்து அமைதியாக இருந்தவர்கள் கடக ராசிக்காரர்களான நீங்கள்தான். அஷ்டம சனி முடிந்து திருக்கணிதப்படி பாக்கிய சனி (9-ம் இடம்) வந்து ஒரு வருஷம் ஆச்சு, ஆனாலும் பெருசா ஒன்னும் நடக்கலையே!" என்று நீங்கள் சலித்துக் கொள்வது புரிகிறது. கவலை வேண்டாம்! உங்களை அரியணையில் ஏற்றுவதற்கான வேலைகளைத்தான் அந்தச் சனி பகவான் இவ்வளவு நாளாகச் சத்தமில்லாமல் செய்து கொண்டிருந்தார். அதற்கான 'மாஸ்டர் ஸ்விட்சை' (Master Switch) ஆன் செய்யப் போகும் காலகட்டம்தான் இந்த பராபவ வருடம்! இந்த வருடம் உங்கள் வாழ்க்கையில் நடக்கப் போகும் அந்த ஜோதிட 'மேஜிக்' என்னவென்று விரிவாகப் பார்ப்போம்! வைகாசி 18: தலையெழுத்தை மாற்றும் திருநாள்! இந்த பராபவ வருடத்தில் கடக ராசிக்காரர்கள் காலண்டரில் பூப்போட்டு குறித்து வைத்துக்கொள்ள வேண்டிய தேதி "வைகாசி 18". ஏனென...